இயற்கையின் எழில்மிகு குன்யிடையே நின்று
விளங்கிடும் பசறையாம் பதியினிலே – எங்கள்
கோணக்கலை தமிழ் வித்தியாலயம்
போற்றுணர் கல்வியில் பயிற்சி தரும் !
நமுனுகுல மலையினிலே தவழ்ந்து வரும்
நறுமணங்கள் என்றும் வீசி வரும்
சீருயர் சுகம் தரும் அருவிகளும்
சிந்தனையைத் தூண்டிட புலமைத் தரும்!
அறிவுயர் ஆசான்கள் அள்ளித்தரும்
நெறியுயர் சிந்தனை நல்க வைக்கும்
பாருயர் பண்புகள் பெருகி வரும்
பண்பாய் பயிற்றிடும் பாசறையாம்!
முத்தமிழ் முதலாய் முன்மொழியும்
முழுமையாய் கற்றிட முயல வைக்கும்
பற்பல கலைகளும் மாண்புடனே
பண்பாய் பயிற்றிடும் பாசறையாம்!
வாழ்க்கையின் வளம்பெற வளர்ப்பவராம்
வான்புகழ் வீர வீரர்களாய் ஆகி
ஒன்றே குலம் என ஒருமைப்படும்
ஓங்கிடும் விழிப்புணர்வு கற்று நிற்கும்!
இயற்கையின் எழில்மிகு குன்யிடையே நின்று
விளங்கிடும் பசறையாம் பதியினிலே – எங்கள்
கோணக்கலை தமிழ் வித்தியாலயம்
போற்றுணர் கல்வியில் பயிற்சி தரும் !